நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் இன்றைய தினமும் அது தொடர்பில் விவாதம் இடம்பெறும் தினங்களிலும் பாராளுமன்றத்துக்கு மேலதிக விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அதன்படி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் விசேட பாதுகாப்பு வரையறைக்குள் வரவு –செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் இடம்பெறும் நாட்களில் பாராளுமன்றம் உள்வாங்கப்படும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று முதல் இந்த பாதுகாப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் விவாதம் இடம்பெறும் தினங்களிலிலும் பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் விசேட சோதனைகள் மற்றும் பாதுகாப்பு விதி முறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள விசேட அறைகளும், பாராளுமன்றை அண்மித்துள்ள தியவன்னா காட்டுப் பகுதியும் விசேட சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதுடன், வரவு –செலவுத் திட்ட சமர்ப்பணம் மற்றும் விவாதம் இடம்பெறும் நாட்களில் பாராளுமன்றிற்கு செல்லுதல் தொடர்பிலும் விசேட போக்குவரத்து திட்டங்களை அமுல் செய்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM