பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று முற்பகல் 11மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த வரவு – செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தனக்கு இந்த கூட்டத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் அதில் கலந்து கொள்வதா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளை போன்று இம்முறை யும் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவ ளிக்க வேண்டும் என்று சில உறுப்பினர்களின் நிலைப்பாடு காணப்படுகின்றது. குறிப்பாக அரசியலமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஆதரவளித்தேயாக வேண்டும் என்ற நிலைப்பாடே உள்ளது.
அதேநேரம் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திற்கு நேரடியாக ஆதரவளிப்பதில்லையென்றும், மக்களின் போராட்டங்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாதிருக்கின்ற நிலையில் அதற்குரிய சில நிபந்தனைகளை விதித்து வரவு – செலவுத் திட்டத்திற்கான ஆதரவு அளிப்பது குறித்த முடிவொன்றை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் சில உறுப்பினர்கள் உள்ளனர்.
இத்தகை பின்னணியில் நடைபெற வுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தில் 2018ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட் டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பது குறித்து ஏற்கனவே தலைமையுடன் சில உறுப்பினர்கள் கலந்துரையாடிய விட யங்கள் தொடர் பாகவும் அதிக கவ னம் செலுத்தப்பட்டு தீர்க்கமான முடி வொன்று எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM