ஒரு இனத்தின் அடையாளத்தை சிதைக்கும் வகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அமைதியான மலையகத்தில் குழப்பத்தை உருவாக்கும் வகையிலேயே இந்த செயற்பாடு காணப்படுகின்றது என தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நீக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் மீண்டும் உள்வாங்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகும் எனவும் எச்சரித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் கணபதி கனகராஜ் கூறுகையில்,
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை அவமதிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது. நாட்டின் சிரேஷ்ட தலைவர்களில் ஓருவரான சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒரு இனத்தின் அடையாளத்தை சிதைக்கும் வகையிலேயே இந்த செயற்பாடு காணப்படுகின் றது.
நோர்வே அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்ட ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம், நோர்வூட் தொண்டமான் மைதானம் மற்றும் ரம்பொட தொண்டமான் கலாசார நிலையம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய அளவில் மாத்திரம் அல்ல, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல மூத்த தலைவர் தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தின் போக்கு சரியில்லை என்பதையே இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. அமைதியாக உள்ள மலையகத்தில் குழப்பத்தை உருவாக்க வேண்டாம். ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விடயத்தில் தலையிட்டு நீக்கப்பட்ட பெயரை இருந்தது போன்று அறிவிக்க வேண்டும். மலையக மக்களை புறந் தள்ளும் வகையிலும் அந்த இனத்தின் மூத்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் அரசாங்கம் செயற்பட்டால் அநாவசியமான அமைதியின்மை மலையகத்தில் உருவாகும்.
நல்லாட்சியில் உள்ள சுயநல அரசியல்வாதிகள் பெயர் நீக்கத்தின் பின்னணியில் உள்ளனர். அவர்களின் இனவிரோத செயற்பாடுகளை மக்கள் அவதானித்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த சுயநல அரசியல்வாதிகளுக்கு மக்கள் நிச்சயம் தண்டனை வழங்குவார்கள் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM