தேசிய அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் இன்று இரண்டாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடவிருப்பதுடன், அமைச்சர் மங்கள சமரவீர வரவுசெலவுத்திட்டத்தை சபையில் இரண்டாவது வாசிப்பிற்காக சமர்ப்பிக்கவுள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும்.
வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளதோடு நாளை வெள்ளிக்கிழமை முதல் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்; ஆரம்பமாகும். இந்த இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 16ஆம் திகதி மாலை நடத்தப்படவுள்ளதோடு இம்மாதம் 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து டிசம்பர் 9ஆம் திகதி மாலை மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதேவேளை வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட விருந்தினர்களை அழைத்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பார்வையாளர் கலரியில் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் சபாநயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள நிலையில் மேலும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளின் வரியைக் குறைக்கபடுவது உள்ளிட்ட நன்மைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM