ஆறு ‘பிடியாணை’களுக்குச் சொந்தக்காரர் வவுனியாவில் கைது

Published By: Devika

08 Nov, 2017 | 07:11 PM
image

நீதிமன்றங்களால் ஆறு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும், நீண்ட காலமாகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நபர் வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேப்பங்குளத்தில் வீடொன்றை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

எனினும், விசாரணையின்போது, அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் நீதிமன்றால் 6 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்றம், கம்பளை நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களே குறித்த நபர் மீது பிடியாணைகள் பிறப்பித்திருந்தன.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி நபரிடம் விசாரணைகள் நடத்திய பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19