கல்முனையை நான்காக பிரிக்கவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும். அவர்களின் இணக்கத்துடனேயே அது தொடர்பிலான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, சாய்ந்தமருது விடயத்தினை முன்னெடுக்க முடியாமைக்கு முஸ்லிம் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையீனமே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று உள்ளூராட்சி அதிகாரசபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை கிடைத்துள்ளது என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தற்போது சாய்ந்தமருதினை பிரதேச சபையாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாக்குறுதியினை வழங்கியிருந்தார். இருப்பினும் பிரதான முஸ்லிம் கட்சிகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மையே அந்த முயற்சி தோல்வியடையக் காரணமாகியுள்ளது.
அதனைக் காரணம்காட்டி என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் எந்தவிதமான மறுப்பினையும் சாய்ந்தமருது விடயத்தில் மேற்கொள்ளவில்லை.
கல்முனை மாநகரத்தினை நான்கு பிரிவுகளாக மாற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதற்கு அவர்களின் இணக்கப்பாடும் அவசியமாகின்றது. இதனைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது.
இதேவேளை அம்பகமுவ பிரதேச விடயத்தில் மலையக தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை காணப்பட்டது. அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் என்னை நேரில் வந்து சந்தித்தனர். கோரிக்கைகளை முன்வைத்து அதனை செயற்படுத்தி வெற்றிகண்டுள்ளனர்.
இதேநேரம் தேர்தலை நடத்துவதற்கு நான் தடையாக உள்ளதாக இங்கு குற்றம் சாட்டப்பட்டது. உண்மையிலேயே நவம்பர் இரண்டாம் திகதியே வர்த்தமானி அறிவிப்புக்கான கையொப்பத்தினை செய்து விட்டேன். அது அரச அச்சகத்திற்கும் அனுப்பப்பட்டுவிட்டது. எனது பணிகள் நிறைவடைந்து விட்டன. ஆகவே விரல் நீட்டுவதற்கு முன்னதாக நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டும். குற்றம் சாட்டுவதை விடவும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM