ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் விவகாரம் மற்றும் தேரவாத பௌத்த மத தொடர்பு நிலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு மியன்மாரின் தேரர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் வரலாற்று காலம் தொடக்கம் மதரீதியில் நல்லிணக்க தொடர்பு காணப்படுகின்றது. இந்த தொடர்பினை மேம்படுத்தும் முகமாக பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரின் பௌத்த மதத் தலைவர்களுடன் கலந்துரையாடலினை மேற் கொள்ள உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல் இன்று தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மியன்மாரில் இடம்பெறவுள்ளது. இதன் பொழுது ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் விவகாரம்,தேரவாத பௌத்த மத தொடர்பு நிலை மற்றும் நல்லிணக்க தொடர்பு வலுவூட்டல் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று பொதுபல சேனா அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM