நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள மக்கள் பெற்றோலுக்காக அங்குமிங்கும் அலைந்து திரிவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
எரிபொருள் விநியோகம் குறிப்பாக பொற்றோலை வாகனங்களுக்கு மட்டுமே விநியோகிக்க வேண்டுமென உத்தரவளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்கள் பெற்றோல் கொள்வனவுக்காக பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இரவு பகலாக நீண்ட வரிசையில் குழந்தைகள் மற்றும் கொள்கலன்களுடன் நிற்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக வாகனங்களை வைத்திருக்கும் பெண்கள் கைப்பையை தூக்குகிறார்களோ இல்லையோ காலையில் எழுந்தவுடன் பெற்றோல் கொள்வனவுக்காக போத்தல், கான், கொள்கலன்களை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பெற்றோல் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை வழமைக்குத்திரும்பவுள்ளது. அதுவரையில் பாவனைக்குத் தேவையான பத்தாயிரம் மெட்ரிக்தொன் பெற்றோல் கையிருப்பில் உள்ளது. எனினும் டீசல் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை.
எனவே டீசலை விநியோகிக்காது பதுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துசெய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். அத்துடன் போத்தல்கள் மற்றும் சிறிய பாத்திரங்களில் பெற்றோல் விநியோகிப்பதை தடுக்கவுள்ளோம் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM