இலங்கைக் கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்க நால்வர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நால்வரில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்ட அனில் கும்ளேவும் ஒருவர் என்று அறியக்கிடைக்கின்றது.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தற்போது இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நிக்போதஸ் செயற்பட்டு வருகின்றார்.
இவர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர். இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிரஹம் போர்ட் இராஜினாமா செய்ததையடுத்து நிக் போதஸ் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.
அதன்படி பங்களாதேஷ் அணியின் தற்போதைய பயிற்சியாளராக செயற்பட்டுவரும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ளே ஆகியோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இவர்கள் முக்கிய நிபந்தனைகளையும் முன்வைத்தே தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இன்னும் ஓரிரு வாரங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM