வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸார் சோதனையிட்ட போது, கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று காலை 11.30மணியளவில் யாழ்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு வந்த பேருந்தில் எடுத்துவரப்பட்ட பயணப்பொதியிலிருந்து 4 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கஞ்சாவினை எடுத்து வந்தவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 55 வயதுடைய அப்பு அரியரத்தினம் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடம் முன்னெடுக்கும் விசாரணைகளையடுத்து , வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM