இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அஞ்சலோ மெத்தியூஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். அதேவேளை மூன்றாவது வீரராக களமிறங்கும் இளம் வீரர் குசல் மெண்டிஸ் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று வகைக் கிரிக்கெட் தொடர் கடந்த 29ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் 16ஆம் திகதி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத் தில் ஆரம்
பமாகவுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
தினேஷ் சந்திமால் தலைமையிலான அவ்வணியில் திமுத் கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்கிரம, அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், தில்ருவன் பெரேரா, லஹிரு கமகே, சந்தகான், விஷ்வ பெர்னாண்டோ, தஷுன் சானக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் ரெஷேன் சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட நாட்களாக காயம் காரணமாக ஓய்விலிருந்த இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
அனைத்து வகையிலும் பலம் பொருந்திய இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள அனுபவ வீரர்கள் அணியில் இருப்பது கட்டாயம்.
அந்தவகையில் அஞ்சலோ மெத்தியூஸின் வருகை இலங்கைக்கு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை அண்மைய போட்டிகளில் தனது திறமையை நிரூபிக்கத் தவறிய இளம் வீரர் குசல் மெண்டிஸ் இந்தியத் தொடருக்கான இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட வில்லை.
அதேவேளை குசல் ஜனித் பெரேரா மற்றும் அசேல குணரத்ன ஆகியோரும் காயத்திலிருந்து மீண்டு போட்டிகளில் களமிறங்க தயாராகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 16ஆம் திகதி கொல்கத்தாவில் இலங்கை – இந்திய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதேபோல் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM