நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பெற் றோல் தட்டுப்பாட்டுக்கு அரசாங்கத்தின் முன் ஏற்பாடுகளற்ற செயற்பாடுகளே கார ணம் என சுட்டிக்காட்டிய கூட்டு எதிர்க்கட்சி பகலிரவு பாராது பணியாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால இது குறித்து பராமுகமாகவிருப்பது ஏன் எனவும் கூட்டு எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
புஞ்சிபொரளையில் அமைந்துள்ள ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிடுகையிலேயே கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகை யில்,
தற்போது நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சிரமப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட பெற்றோலுக்கு தட்டுப்பாடு இவ்வாறு ஏற்படவில்லை. அவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட அளவிலான பெற்றோல் களஞ் சியப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய ஆட்சியில் அவ்வாறான முன் ஏற் பாடு எதுவும் கிடையாது. அதன் காரணமாகவே நாட்டில் பாரிய பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியில் யுத்தம் உட்பட பல்வேறுபட்ட பிரச்சினைகள் நாட்டில் நிலவிய போதும் நாம் மக்களது ஜீவனோபாயத்துடன் விளையாடவில்லை. மக்களது உணவு தேவையினை நாம் சீராக நடைமுறைப்படுத்தினோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவசாயத்துறை அமைச்சராக இருந்த பொழுது வர்த்தக மற்றும் நுகர்வு விடயங்களில் அவர் எம்முடன் பகலிரவு பாராது பாடுபட்டதை என்னால் மறக்க முடியாது. எனினும் அத்தகைய ஒருவர் தற்போது ஏன் இவ்விடயங்களில் முறை யான வேலைத்திட்டங்களை அமுல்படுத் துகின்றார் இல்லை என்பது தான் ஆச்சரிய மாகவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM