மாத்தளை, இரத்தோட்டை வீதியில் கைகாவலை பிரதேசத்தில் நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளொன்று தடம் புரண்டு வீழந்துள்ள நிலையில், அதன் பின்னால் பயணித்த மோட்டார் கார் ஒன்று பாதையில் விழுந்திருந்த மோட்டார் சைக்கிளின் சாரதி மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தையடுத்து கார் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் கடும் காயங்களுக்குள்ளனான நிலையில், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் மாத்தளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த வெல்லசாமி வினோத் என்ற 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
இவ் விபத்துடன் தொடர்படையவர் என சநதேகிக்கும் நபரான தப்பிச் சென்றுள்ள காரின் சாரதியை கைது செய்வதற்கு இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM