சவூதியின் தலைநகரான றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த ஏவுகணைத் தாக்குதலானது யேமனில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக அங்கு பெரும் பதற்றநிலை காணப்பட்ட போதிலும் எவ்வித உயிர்ச்சேதங்களே அல்லது பொருட்சேதங்களோ ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
சவூதி அரசாங்கம் அண்மைக்காலமாக யேமெனில் உள்ள போராட்டக் குழுக்களுக்கு எதிராக கடுமையான ஆகாய வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சவூதியின் தலைநகர் றியாத்தில் நேற்றிரவு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த ஏவுகணைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யேமனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கையில்,
சவூதியின் தலைநகரை அசைத்துள்ள ஏவுகணைத் தாக்குதலானது வெற்றிகரமாக அமைந்துள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஏவுகணையானது யேமன் தயாரிப்பு ரொக்கெட் எனவும் நீண்ட தூரம் தாக்கும் “புர்ஹன் 2 எச்” வகையான ஏவுணையெனவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM