தமிழகமெங்கும் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றமையால் சென்னை வெ ள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் மேலும் 500 மி.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பி.பி.சி. செய்திச்சேவை எச்சரித்துள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 500 மி.மீ.மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பி.பி.சி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பி.பி.சி. வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இந்நிலையில், பி.பி.சி. வானிலை செய்திப்பிரிவு தனது ட்விட்டரில் நேற்றுமுன்தினம் மாலை ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை, (புதுச்சேரி, கேரளா, தமிழகம்) ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமை (இன்று) கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மற்றொரு ட்விட்டில் "தென்கிழக்கு இந்தியா மற்றும் இலங்கை அருகில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயகட்ட அளவுக்கு மழையை கொண்டு வரும்" என்று கூறப்பட்டிருந்தது. பி.பி.சி. கூறியதை போலவே வெள்ள அபாயம் ஏற்படும் அளவுக்கு சென்னையில் நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
இதேவேளை நேற்று பி.பி.சி. வெளியிட்ட ட்விட்டில் 500 மில்லி மீற்றர் அளவுக்கு மழை பெய்யலாம். இன்னும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது. நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 200 மி.மீ. மழை கடந்த 3 நாட்களில் பெய்துவிட்டது. எதிர்வரும் சில நாட்களில் 300-–500 மி.மீ. பெய்யக்கூடும். இன்னும் அதிகபட்சம் 500 மி.மீ. மழை சென்னையில் பெய்யக்கூடும் என கூறியுள்ளது. பி.பி.சி.யின் இந்த அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM