ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்பில் மக்களது கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பில் மக்களது கருத்துக்கள் நிச்சயமாக உள்வாங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஒரு நாட்டை உருவாக்கவும், வழிநடத்திச் செல்லவும் பல வழிமுறைகள் இருந்த போதிலும் அவற்றுள் பிரதான காரணியாக இருப்பது அரசியலமைப்பு ஆகும். ஆட்சி புரியவும் சட்டங்களை வகுக்கவும் அரசியலமைப்பின் விதிமுறைகளின் ஊடாகவே முடியும் என்பது அரசியல்வாதிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அறிந்த உண்மையாகும்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தமது கட்சி நலன் கருதி சில சிந்தனைத்திட்டங்களை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக மஹிந்த சிந்தனை, ரணில் சிந்தனை, சந்திரிகா சிந்தனை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் அவை யாவும் அரசியல் நலன் கருதியோ நாட்டின் எதிர்காலம் கருதியோ உருவாக்கப்பட்டவையல்ல.
1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தேர்தல் முறைமையில் மாற்றங்களைக் கொண்டு வர முனைந்த போதிலும் அது சாத்தியப்படாமல் போனது. 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தன கொண்டுவந்த அரசியலமைப்பு மிகவும் பலம் பொருந்தியதாக காணப்பட்டது. தற்போது காலத்தின் தேவை கருதியே புதிய அரசியலமைப்பினை உருவாக்க நாம் முயற்சித்து வருகின்றோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்த விதமாகவே மஹிந்த ராஜ பக் ஷவும் புதிய அரசியல் யாப்பினைக் கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் அவரும் அவரது கட்சியினரும் இதற்கு இப்போது எதிர்ப்பினைத் தெரிவித்து வருவது எமக்கு ஆச்சரியத்தை தருகிறது. கூட்டு எதிரணியினர் பாராளுமன்றம் முன்பாக அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். கொள்கையற்ற அரசியலையே இவர்கள் நடத்தி வருகின்றனர்.
சுமார் முப்பது வருட காலம் நாட்டில் நிலவிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு புதிய அரசியலமைப்பு ஒரு போதும் வழி சமைக்காது. பௌத்த மதத்துக்கும் எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாது. மக்களை திசை திருப்பி தமது அரசியலை முன் கொண்டு செல்வதே கூட்டு எதிரணியினரின் இலக்காக உள்ளது. இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் காலம் தாழ்த்தப்பட்டாலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது உறுதி.
"ஏக்கிய ரட்ட" என்னும் ஒருமித்த நாடு என்ற பதத்தினை நாம் பயன்படுத்த வேண்டும். அப்பதமானது பிரிவினைக்கு வழிவகுக்காது. ஒரு காலத்தில் எம்முடன் பல தரப்பட்ட விடயங்களில் முரண்பட்ட சம்பந்தன் தற்போது புதிய அரசியலமைப்பு விவகாரம் உட்பட பல
விடயங்களில் ஒத்துப்போகின்றார் என் றால் ஏன் ஏனையோரால் எம்முடன் ஒத்துப்போக முடியாது?
ஆசியாவின் சிறந்த நாடாக எமது நாட்டைக் கட்டியெழுப்புவது எமது நோக்கமாகும். ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடு தலை முன்னணி, எதிர்க்கட்சி என நாம் பிரிந்து செயற்பட்டால் எவ்வாறு நாடு அபி விருத்தியை நோக்கிச் செல்லும்? சகலரும் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய தருண மிது. ஜனாதிபதி சர்வகட்சி மாநாடு நடத்து வதாக தெரிவித்திருந்தார். அதில் சகல கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்மொழியலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM