111 ஏக்கர் காணிகள் டிசம்பருக்குள் விடுவிக்கப்படும் : சுவா­மி­நாதன்

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 01:24 PM
image

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் இரா­ணு­வத்­தி­ட­முள்ள 111 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்­காக 148 மில்­லியன் ரூபா இரா­ணு­வத்­திற்கு வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் அளித்­துள்ள நிலையில் எதிர்­வரும் டிசம்பர் மாதத்­திற்குள் அக்­கா­ணிகள் பொது­மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­படும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். 

மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட குடும்­பங்­களின் வாழ்வாதாரத்தை முன்­னேற்­று­வ­தற்­காக வாழ்­வா­தார அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்டு சுய­தொழில் உப­க­ர­ணங்­களைப் பகிர்ந்­த­ளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்­கி­ழமை வவு­னியா பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­றது. 

இந்த நிகழ்ச்­சித்­திட்டம் மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் முதற்­கட்­ட­மாக மடு பிர­தேச செய­ல­கத்தில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. பின்னர் மன்னார் பிர­தேச செய­ல­கத்­திலும் முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­திலும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. 

மன்னார் மாவட்­டத்தின் 500 பய­னாளிக­ளுக்கு 50 மில்­லியன் ரூபாவும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் 600 குடும்­பங்­க­ளுக்கு 60 மில்­லியன் ரூபா சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்­சினால் செல­வி­டப்­பட்­டது. அதன்­படி 1,100 குடும்­பங்­க­ளுக்கு 110 மில்­லியன் ரூபாவும் அமைச்­சினால் செல­வி­டப்­பட்­டுள்­ளது. 

விவ­சாயம், மிருக வளர்ப்பு, சுய­தொழில், சிறிய தொழில்­ மு­யற்­சிகள் என்­ப­வற்றை ஆரம்­பிப்­ப­தற்­காக இந்த உத­விகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்­தின்கீழ் பய­னாளிக் குடும்பம் ஒன்­றுக்கு ஒரு இ­லட்சம் ரூபா தொகை செல­வி­டப்­பட்­டுள்­ளது. 

இந்­நி­லையில் குறித்த ஆரம்ப நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், மீள்­கு­டி­யேற்ற அமைச்சு வடக்கு கிழக்கின் 8 மாவட்­டங்­க­ளுக்கும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை உயர்த்தும் முக­மாக பல்­வே­றான திட்­டங்­களை கடந்த இரண்­டரை வருட கால­மாக செயல்­ப­டுத்தி வரு­கின்றது. இவ்­வ­ருடம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்­காக எமது அமைச்­சினால் பல்­வேறு நிதி ஒதுக்­கீ­டுகள் மேற்­­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இடம்­பெ­யர்ந்­தோர்­க­ளில் 578 குடும்­பங்­க­ளுக்­காக வீடுகளை அமைக்க 463 மில்­லியன் ரூபாவும், பகுதி சேத­ம­டைந்த வீடு­களை சீர­மைப்­ப­தற்­காக 43 குடும்­பங்­க­ளுக்கு 10 மில்­லியன் ரூபாவும், பாரிய அள­வி­லான சுகா­தார துப்­ப­ுரவு திட்­டத்­துக்­காக 330 குடும்­பங்­க­ளுக்கு 20 மில்­லியன் ரூபாவும் குடிநீர் திட்­டத்­துக்கு 120 குடும்­பங்­க­ளுக்­காக 15 மில்­லியன் ரூபாவும் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­த­லுக்­காக 33 குடும்­பங்­க­ளுக்கு 30 மில்­லியன் ரூபாவும், கல்­வித்­துறை முன்­னேற்­றத்­திற்­கான திட்­டங்­க­ளுக்­காக 59 குடும்­பங்­க­ளுக்கு 50 மில்­லியன் ரூபாவும் வாழ்­வா­தார உதவித் திட்­டங்­க­­ளுக்­காக 600 குடும்­பங்­க­ளுக்­காக 60 மில்­லியன் ரூபாவும் சிறு நீர்த்­தாங்­கிகள் அமைப்­ப­தற்கு 42 குடும்­பங்­க­ளுக்­காக 100 மில்­லியன் ரூபாவும் சிகிச்சை நிலைய­மொன்றை குடும்­ப­மொன்­றுக்கு அமைத்­துக்­கொ­டுப்­ப­தற்­காக 30 மில்­லியன் ரூபாவும் இல­வச மின்­சார இணைப்பு வழங்­க­லுக்­காக 1250 குடும்­பங்­க­ளுக்கு 25 மில்­லியன் ரூபாவும் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

இம்­மா­வட்­டத்தின் வாழ்­வா­தார உத­வி­களை பெறும் பய­னா­ளி­க­ளுக்கு தேவை­யான உப­க­ர­ணங்­களை வழங்­கு­வதும் எமது நோக்­க­மாகும். இவ் உத­வி­களை பெற்­றுக்­கொள்ளும் நீங்கள் அதை சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி உங்­க­ளது மாதாந்த வரு­மானத்தை அதி­க­ரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்ெ­வா­ரு­வ­ரு­டமும் இவ் வகை­யான திட்­டங்கள் தொடர்ந்து நடை­முறைப்படுத்­தப்­படும் என்­பதை அறி­யத்­த­ரு­வ­துடன் நீங்கள் அனை­வரும் எனக்கும் எமது அர­சிற்கும் வழங்கும் ஒத்­து­ழைப்­பிற்கு உங்கள் அனை­வ­ருக்கும் நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். 

உங்கள் பகு­தியில் நீண்­ட­கால கோரிக்­கை­யான கேப்­பா­பு­லவு காணி விடு­விப்பு எமது முயற்­சி­யினால் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. முதல் கட்­ட­மாக 243 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட்­ட­துடன் எமது அமைச்சின் 5 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டின் மூலம் 189 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. 

மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக் காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாது­காப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம் தெரிவித்திருந்தேன். இதன்படி 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி  இத்தொகை வழங்கப்பட்டதற்கு இணங்க 111 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களை இராணுவத் தரப்பு மேற்கொண்டுள்ளது என்பதனை இத் தருணத்தில் அறியத்தருகின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44