(ஆர்.யசி)
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யோஷித்த மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் கைதிகளேயாவர். இவர்களை விடுதலை செய்யக்கோரி மக்களை ஒன்றிணைத்து போராடவுள்ளோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்தது.
அதேபோல் இவர்கள் விடுதலையாகும் நாளில் பத்து இலட்சம் தேங்காய்களை உடைத்து எமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் உள்ளோம்.
இன்றில் இருந்து எந்தவொரு அரச நிகழ்சிகளிலும் கலந்துகொள்வதில்லை எனவும் சுதந்திரதின விழாவை புறக்கணிப்பதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவை சிறையில் சந்திக்க மஹிந்த ஆதரவு அணியினர் இன்று சென்றிருந்தனர். அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அணியினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இதில் விமல் வீரவன்ச, உதய கம்மன் பில, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM