பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவர் இன்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட மேலும் மூவருமாக ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் மேற்கொள்ப்பட்ட ஆர்பாட்டத்தில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர் ஒருவரின் வர்த்தக நிலையத்திக்கு கல்வீச்சு நடத்ததப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்படி சந்தேக நபர்கள் செய்யப்பட்டனர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண உறுப்பினருமாகிய பி.சக்திவேல், மத்திய மாகாணசபை உறுப்பினர் பிலிப்குமார், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மலர்வாசகன், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் லோகநாயகி உட்பட தலவாக்கலை நகரசபை முன்னாள் உறுப்பினர் பாரதிதாசன் ஆகியோர் கைது நேற்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM