10,000 சிறுவர்கள் மாயம் : பாலியல் தொழிலாளிகளாகவும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

Published By: Robert

01 Feb, 2016 | 03:11 PM
image

Europol has found evidence of a "criminal infrastructure" established since mid-2014 which exploits refugees [Darrin Zammit/Reuters]

ஐரோப்பாவுக்கு சட்டவிரோமாக வந்த அகதிச் சிறுவர்களில் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாகவும் மற்றும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமுலாக்க முகவர் நிலையமான யூரோபோல் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவுக்கு பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டு வரும் அகதிச் சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இலக்கு வைத்து கடத்திச் சென்று சுய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக அந்த நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 26,000 சிறுவர்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

அவர்களில் குறைந்தது 10,000 அகதிச் சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் யூரோபோவின் தலைமை அதிகாரியான பிரெயின் டொனால்ட் தெரிவிக்கையில், “அந்த 10,000 சிறுவர்களுக்கும் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியாது. அவர்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பதோ அல்லது அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதோ எமக்குத் தெரியாது. ஆனால் பாலியல் தொழில் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் அந்தச் சிறுவர்களை இலக்கு வைத்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன. 

மேலும், காணாமல் போன அனைத்து சிறுவர்களுமே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் சிக்கியுள்ளனர் என நாம் கருதவில்லை" என்று கூறினார்.

ஜேர்மனி, சுவீடன் ஆகிய நாடுகளை மட்டும் சுமார் 90,000 சிறுவர்கள் வயது வந்தவர்களின் உதவியில்லாமல் வந்தடைந்துள்ளதாகவும் முழு ஐரோப்பாவையும் வந்தடைந்துள்ள குடியேற்றவாசிகளில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42