புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்துடனான சிரித்தால் மட்டுமே முகத்தைக் காட்டும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியுள்ளார்.
2,000 டொலர்கள் முதல் 3,000 டொலர்கள் வரையான விலையில் இந்தக் கண்ணாடி டெப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கெமராவும் பொருத்தப்பட்டுள்ளன.
முக உணர்ச்சிகளைக் கண்காணித்து சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது.
குறித்த நவீன கண்டு பிடிப்பு தொடர்பாக படைப்பாளி பெர்க் இல்ஹான் கருத்து தெரிவிக்கையில்,
”எந்த கஷ்டம் வந்தாலும் அதைக்கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். அல்லது மரணமாவது தள்ளிப்போகக்கூடும்.
நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும், வைத்தியர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன்” என கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM