முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வித்தியா கொலை வழக் கின் குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்பிச் செல்ல உதவியமை, கடந்த ஜனா திபதி தேர்தலின் போது பொது எதிர ணியினரின் தேர்தல் பிரசார மேடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரைக் கொலை செய்தமைக்காக முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு ஆதரவாக செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைதாகி பிணையில் உள்ள நிலையிலேயே அவருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காவத்தை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப் படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM