சோகத்தில் மூழ்கியது யாழ்ப்பாணம் : தாயின் உடல் தகனம்,  குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம்

Published By: Priyatharshan

29 Oct, 2017 | 05:12 PM
image

யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்திருந்தார்.

ஒரு கோடி 17 இலட்சம் ரூபா பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து விட்டு ஏமாற்றம் அடைந்த காரணத்தினால் குறித்த பெண்ணின் கணவர் முதலில் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பெண் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த காரணத்தினாலும், கணவரின் பிரிவை தாங்க முடியாத நிலையில் தனது 3 பிள்ளைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷம் பருகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது தனது மரணத்திற்கு காரணம் இவர்கள் தான் என குறிப்பிட்டு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியதால் யாழ் நகரமெங்கும் முழுதும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், தாயின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51