UPDATE: கொஸ்கொடையில் துப்பாக்கிச் சூடு; தந்தை, மகன்மார் பலி!

Published By: Devika

29 Oct, 2017 | 09:41 AM
image

கொஸ்கொடையில் இன்று (29) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் என்று தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாகவே இப்படுகொலைச் சம்பவம் நடந்திருக்கிறது என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொஸ்கொடையில் இன்று (29) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் என்று தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாகவே இப்படுகொலைச் சம்பவம் நடந்திருக்கிறது என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பலியானவர்கள் 52 வயதான தந்தையும் அவரது இரண்டு மகன்களுமே என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று படுக்கையில் இருந்த மூவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதேவேளை, கொஸ்கொடயின் மெனிக் கம பகுதியைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

கொஸ்கொட, குருந்துகம்பியஸ பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு துப்பாக்கிச் சூட்டில், பதினைந்து வயது மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கிடையே தொடர்பு இருப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட முன் விரோதத்தின் விளைவாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி:

கொஸ்கொடையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21