கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திரப் பிரகடனம் செய்த சில மணி நேரங்களில், கட்டலோனியாவை ஸ்பெயின் அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கட்டலோனியாவில் பதவி வகித்த பொலிஸ் உயரதிகாரிகள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டலோனியாவில் நேற்று நடத்தப்பட்ட பாராளுமன்ற வாக்கெடுப்பில், சுதந்திரத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகின. இதையடுத்து கட்டலோனியா சுதந்திரம் பெற்றதாகவும், கட்டலோனிய அரசவை சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பிரகடனத்தையடுத்து கட்டலோனிய மாகாண முதலமைச்சரைப் பதவிநீக்குவதாகவும், மாகாண அரசை கலைப்பதாகவும் அறிவித்த ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், உடனடியாக அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இதையடுத்து சுதந்திரத்துக்கு ஆதரவான ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், சுதந்திரத்துக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கும் இடையே மோதல்களும் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM