மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் உடல் ஓராண்டுக்குப் பின் புத்த மத வழக்கப்படி நேற்று தகனம் செய்யப்பட்டது.
1946 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி தாய்லாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்ட பூமிபால் அதுல்யதேஜ் 9ஆம் ராமர் என அழைக்கப்பட்டார்.
தாய்லாந்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக இருந்த பூமிபால் உடல் நலக்குறைவால் தனது 88ஆவது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் திகதி உயிரிழந்தார்.
நவீன தாய்லாந்தை உருவாக்கிய பெருமையை கொண்ட மன்னர் பூமிபாலின் மறைவுக்கு ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
அவரது உடலுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் மன்னர் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இதற்காக மன்னர் பூமிபாலின் அரண்மனையில் கடந்த 5 நாட்களாக புத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற்று வந்தன. மேலும் மன்னரின் உடலை தகனம் செய்வதற்காக 600 கோடி ரூபாய் செலவில் தகன மேடை அமைக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தகன மேடையை அமைக்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டிருந்தது. தங்க முலாம் பூசப்பட்ட அரண்மனை வடிவில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றிலும் நுண்ணிய கலை நுட்ப வேலைபாடுகளுடன் கூடிய தங்கச் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இராணுவ வீரர்களும் மன்னரின் உடலை கொண்டு வரும்போது அளிக்க வேண்டிய மரியாதைக்காக பலமுறை ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னரை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என மன்னரின் உடல் கொண்டுவரப்படும் வழிநெடுகிலும் மக்கள் கடந்த ஒரு வாரமாக மழை மற்றும் வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்துக்கிடந்தனர்.
இந்நிலையில் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் மன்னர் பூமிபாலின் உடல் நேற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கறுப்பு உடையணிந்து மன்னருக்கு இறுதியாக கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.
மன்னரின் உடல் தகனத்தையொட்டி தாய்லாந்து நாட்டில் நேற்று பொது விடுமுறை விடப்பட்டிருந்தது. அங்கு அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் மன்னரின் குடும்பத்தினருடன், 40 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இறுதிச்சடங்கை யாரும் செல்பி எடுக்க கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
புத்த மத வழக்கப்படி இரவு 10 மணிக்கு மன்னர் உடலுக்கு அவரது மகனும், புதிய மன்னருமான வஜிரலோங்கோன் தீ மூட்டினார்.
மன்னரின் உடல் தகனம் முடிந்து விட்டதால் இனி முறைப்படி புதிய மன்னராக பூமிபாலின் மகன் வஜிரலோங்கோன் முடி சூட்டப்படுவார். அவர் பத்தாம் ராமர் என்று அழைக்கப்படுவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM