முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் பொருத்தப்பட்டு தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் தசைகளுக்கு மின் அதிர்ச்சியை வழங்கி வலியிலிருந்து விடுதலை அளிக்கக் கூடிய உபகரணமொன்றை பிரித்தானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மிடில்ஸ்பரோவிலுள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் சாம் எல்டபி தலைமையிலான குழுவினரால் இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உபகரணம் கடந்த 10 வருடங்களாக கடும் முதுகுவலியால் துன்பப்பட்டு வந்த நபரொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
'றீஅக்டிவ்8' என்ற இந்த உபகரணம் பலவீனமடைந்த தசைகளுக்கு மின் அதிர்ச்சியை வழங்குவதன் மூலம் வலியை நீக்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி உபகரணம் நோயாளியின் இடுப்பு பகுதிக்கு சிறிது மேலாக முதுகுப் பக்கத்தில் பொருத்தப்படுகிறது.
இந்நிலையில் தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் அந்த உபகரணத்தின் மூலம் 30 நிமிட மின் அதிர்ச்சி தினசரி இரு தடவைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு 6 மாதங்களுக்கு இந்த உபகரணத்தைப் பயன்படுத்து வதன் மூலம் முதுகுவலியிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM