ஓய்வுபெற்றார் ட்ரவிஸ் சின்னையா!

Published By: Devika

26 Oct, 2017 | 09:26 AM
image

கடற்படைத் தளபதியாக குறுகிய காலமே பதவி வகித்த தமிழர் ட்ரவிஸ் சின்னையாவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முப்பத்தைந்து வருட காலம் கடற்படையில் சேவை புரிந்த ட்ரவிஸ் சின்னையா இரண்டு மாதங்களுக்கு முன் தளபதியாக நியமிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் கடற்படையின் உயரிய பதவியை அலங்கரித்த முதல் முறை இதுவே! அன்றிலிருந்து ஒரு மாத காலமே அவர் பதவி வகிக்கவேண்டியிருந்தது.

அப்போது, அவரது பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதமாக அதிகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதையடுத்து, மேலும் ஒரு மாதம் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாகவே தொடர்ந்தார்.

இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. மேலும், ட்ரவிஸ் சின்னையா கடற்படையில் இருந்து இன்றுடன் (26) ஓய்வுபெறுகிறார்.

இதையடுத்து, அவருக்கு அட்மிரலாகப் பதவியுயர்வு அளித்து கௌரவப்படுத்தியிருக்கிறது அரசு.

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33