நீதிமன்றில் ஆஜரானார் ரஞ்சன் ராமநாயக்க

Published By: Priyatharshan

25 Oct, 2017 | 10:37 AM
image

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  உயர் நீதிமன்றில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்றைய தினம் அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமைக்கு அமைய அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் சுனந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி சுனில் பெராரா ஆகியோர் உயர் நீதிமன்றில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த இரு மனுக்களும் கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகி, அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47