ரஷ்யாவானது துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் துருக்கி எச்சரித்துள்ளது.
சிரிய எல்லையுடனான தனது வான் பரப்பில் ரஷ்யாவின் போர் விமானமொன்று பறந்ததாக துருக்கிய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யாவானது இது எந்த அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டு என மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தனது வான் பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் ரஷ்ய போர் விமானமொன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளது. ரஷ்யா சிரிய அரசாங்கத்திற்கு ஆதரவாக அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் ஏனைய போராளி குழுக்களுக்கும் எதிராக கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு நேரப்படி 11.46 மணிக்கு குறிப்பிட்ட ரஷ்ய எஸ்.யு-–34 விமானம், ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் தம்மால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து துருக்கிய வான் பரப்பைக் கடந்து சென்றதாக துருக்கிய வெளிநாட்டு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஜராகி விளக்கமளிக்க துருக்கியிலுள்ள ரஷ்ய தூதருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய அத்துமீறல்கள் தொடருமானால் ரஷ்யா கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என துருக்கிய ஜனாதிபதி தாயிப் எர்டோகன் சனிக்கிழமை எச்சரித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM