ஓடும் ரயிலில் இன்பம் கண்டவர் கைது!

Published By: Devika

24 Oct, 2017 | 05:59 PM
image

ஓடும் ரயிலில் பெண்ணைப் பார்த்து தன்னின்பம் கண்ட இளைஞரை ரயில்வே பொலிஸார் கைது செய்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் ஏறிய இந்த முப்பது வயது நபர், அதனுடன் ஒட்டியிருந்த அடுத்த பெட்டியில் பயணித்த பெண் ஒருவரைக் கண்டு இன்பம் துய்த்துள்ளார்.

அவரது இந்த நடவடிக்கையை தனது கைபேசியில் ஒளிப்பதிவு செய்த அப்பெண், ரயில்வே பொலிஸாரிடம் புகார் தெரிவித்தார். அவர் வழங்கிய காணொளியை வைத்து குற்றவாளியை பொலிஸார் கைது செய்தனர். 

குறித்த நபர் ஒடிஷாவைச் சேர்ந்தவர் என்றும், மும்பையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றுபவர் என்றும், சம்பவத்தின்போது போதைப் பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right