உலகின் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சைக் குறை கூறிய நடுவர் டெரல் ஹெயார், பணத் திருட்டில் நன்னடத்தைத் தண்டனை பெற்றார்.
1995ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அணியில் இணைந்து சிலகாலமே ஆகியிருந்த முத்தையா முரளிதரனும் அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தார்.
அத்தொடரின் போட்டியொன்றில் நடுவராகக் கடமையாற்றிய டெரல் ஹெயார், முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றதாகத் தெரிகிறது என்று குறைகூறியிருந்தார். இதையடுத்து எழுந்த குற்றச்சாட்டுகளால் முரளிதரன் பல முறை தனது பந்துவீச்சு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது.
முரளிதரன் மீது குறை கூறிய அதே நடுவர் டெரல் ஹெயார், சூதாட்ட மோகத்தினால் மதுபான விடுதியொன்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ஒன்பதாயிரம் டொலர்களைத் திருடியது தற்போது அம்பலமாகியிருக்கிறது.
இதுபற்றிய நீதிமன்ற விசாரணையில், தனது தவறை நடுவர் டெரல் ஹெயார் ஒப்புக்கொண்டார். அத்துடன், அந்தப் பணத்தைத் திருப்பியளிக்கவும் ஒப்புக்கொண்டார்.
இதனால் அவர் குற்றவாளி எனப் பதிவு செய்யப்படாத போதும், ஒன்றரை வருடங்கள் நன்னடத்தைச் சிறையில் இருக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM