பிரித்தானியா மற்றும் தாய்லாந்து போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இந்த போர்க் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.
“எச்.எம்.எஸ் டிபென்டர்” எனும் பிரித்தானிய கடற்படையின் போர்க்கப்பல் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்த போர்க்கப்பலை இலங்கையின் கடற்படை கலாசாரத்தின் அடிபடியில் வரவேற்கப்பட்டது.
அதேபோல் நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்த இந்த போர்க்கப்பலின் கட்டளைத்தளபதி கப்டன் ஸ்டீபன் ஹக்மனை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் பிரித்தானிய போர்க்கப்பல் இலங்கையில் அடுத்த வாரம் முழுவதும் தரித்து வைக்கப்படவுள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் இலங்கையின் கடற்படையுடன் பிரித்தானிய கடற்படையினரின் கூட்டு பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இதே வேளை கடந்த வெள்ளிக்கிழமை “எச்.டி.எம்.எஸ் பட்டனி” எனும் தாய்லாந்து கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாய்லாந்தில் இருந்து தமது பயிற்சி நடவைக்கைகளுக்காக இலங்கை வந்த இந்த போர்க்கப்பலை இலங்கையின் கடற்படை சம்பிரதாயத்தின் அடிப்படியில் வரவேற்று இலங்கையின் கடற்படை மரியாதை வழங்கப்பட்டது.
மேலும் இந்த கப்பலும் இலங்கை கடற்படையுடன் இணைந்து தமது கூட்டு பயிற்ச்சிகளை மேற்கொள்வதுடன் எதிர்வரும் . பெப்ரவரி 3ஆம் திகதி வரையில் இலங்கையில் இந்த கப்பல் தரித்திருக்கும்.
மேலும் கடந்த ஆண்டின் ஆறுமாத காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 25 போர்க்கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன. இதில் ரஷ்யா, அவுஸ்திரேலிய, ஜப்பான், பங்களாதேஷ், ஓமன், இந்தியா,பாகிஸ்தான்,கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளன. அதேபோல் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு சர்வதேச போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. பிரித்தானியா,தென்னாபிரிக்கா, ஓமன், நைஜீரியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இலங்கைக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM