இன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாடு பிளவுபடுமானால் நாட்டை எம்மால் வளர்ச்சி பாதைக்கு இட்டுச்செல்ல முடியாது. உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை நீக்கினால் நாடு வளர்ச்சியடையும். எனவே குறித்த இடைவெளியை நீக்க வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"இன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாடு பிளவுபடுமானால் நாட்டை எம்மால் வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முடியாது. எனவே சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதின் ஊடாக மாத்திரமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்ல முடியும். உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி காரணமாகவே உலகில் புரட்சிகள் ஏற்படுகின்றன. எமது நாட்டிலும் இளைஞர்களினால் பல போராட்டங்கள் நடந்தமையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.
இதன்பிரகாரம் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி நீக்கப்பட வேண்டும். இதனை நீக்கினால் நாடு வளர்ச்சியடை யும். எனவே குறித்த இடைவெளியை நீக்க வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். இதன்பிரகாரம் வறுமையை ஒழித்து அதிகளவில் தொழில்வாய்ப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்ல வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM