இலங்­கைக்குள் நீதியை நிலை நாட்டாவிடின் அதனை சர்­வ­தேசம் பெற முயற்­சிக்கும் ; பப்லோ டி கீரீப்

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 10:18 AM
image

இலங்­கைக்குள் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட் ­டா­விடின் சர்­வ­தேச மட்­டத்தில் நீதியை  தேடு­வ­தற்­கான முயற்­சிகள் மிகவும் வலு­ வான முறையில் இடம்­பெறும் என்­பதை அனை­வரும் மனதில் கொள்­ள­வேண்டும்  என்று  இலங்­கை்­கான விஜ­யத்தை முன்­னெ­டுத்த உண்மை, நீதி, நட்­ட­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப்  தெரி­வித்தார். 

இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக பிரேஸில் நாட்டில்  அண்­மையில் இலங்­கையின் முன்னாள் இரா­ணுவத் தள­பதி  ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு  எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கை குறிப்­பி­டலாம்.  இது­போன்ற சம்­ப­வங்கள்  எதிர்­கா­லத்தில்  தொடர்ந்தும்  இடம்­பெறும்  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

யுத்த வெற்­றி­வீ­ரர்­களை நீதி­மன்­றத்தின் முன் கொண்­டு­வ­ர­மாட்டோம் என யாரும் கூற முடி­யாது.  அதனை  நீதி­மன்­றமே  தீர்­மா­னிக்­க­வேண்டும். யுத்த வெற்­றி­வீ­ரர்­களை  இவ்­வாறு  பாது­காப்­ப­தாக  கூறு­வது சுயா­தீன நீதித்­து­றையின் பண்­பு­களை  மீறு­வதைப் போன்­ற­தாகும் என்றும்  ஐ.நா. பிர­தி­நிதி சுட்­டிக்­காட்­டினார். 

பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை  தொடர்ந்தும்  தாம­த­மாக்­க­வேண்டாம். இவ்­வாறு தொடர்ந்தும் இந்த செயற்­பாட்டை தாம­த­மாக்­கு­வது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.  எனவே அர­சாங்கம் உட­ன­டி­யாக   நம்­ப­க­ர­மான பரந்­து­பட்ட சுயா­தீ­ன­மான வெளிப்­படைத் தன்­மை­மிக்க  அனை­வரும் பங்­கேற்­கக்­கூ­டிய பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை  முன்­வைக்­க­வேண்­டு­மென  வலி­யு­றுத்­து­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ்  தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள  அர­சியல் கைதிகள் தொடர்­பான விட­யத்தை  அர­சாங்கம்  உட­ன­டி­யாக   மீளாய்வு செய்­ய­வேண்டும்.  அத்­துடன் வடக்கு, கிழக்கில்  இரா­ணு­வத்தின் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்டும்.   பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை   விரைவில்  நீக்­க­வேண்டும் என்றும்  ஐக்­கி­ய­நா­டு­களின்  விசேட நிபுணர் சுட்­டிக்­காட்­டினார். 

இலங்­கைக்கு 14  நாள் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்ட உண்மை, நீதி, நட்­ட­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்பான  ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று  தனது  இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் நேற்று  ஊடகவியலாளர்களை சந்தித்து தனது மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56