பொகவந்தலாவ டின்சின் நகரப்பகுதியில் நேற்று இரவு 07.15 மணி அளவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த இருவர் பொகவந்தலாவ மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை மேலும் எழுவரைத் தேடி பொகவந்தலாவ பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
பொகவந்தலாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த இரு குழுவினரும் மது போதையில் இருந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட வாய்தர்க்கம் பின்பு மோதலாக மாறியுள்ளது.
இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவருக்கு தலைபகுதியிலும் வலது கைபகுதியிலும் தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு மற்றைய நபருக்கு வலது கையிலும் வலது கால்பகுதியிலும் தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான இருவரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு தாக்குதல் நடத்திய குழுவினருள் எழுவர் தலைமறைவாகியுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM