துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் ; யாழில் பதற்றம்

Published By: Priyatharshan

22 Oct, 2017 | 04:30 PM
image

(ரி.விரூஷன் )

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், உதயபுரம், கடற்கரைவீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை மோட்டர் சைக்கிளொன்றில் வந்த இரு ஆயுததாரிகள் வழிமறித்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்ஷ்மன்  என்பவர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, காயமடைந்தவரின் உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவரை பார்வையிட வேண்டுமெனக் கோரி வைத்தியசாலை வளாகத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியிலும் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59