“இது அரசியல் பழிவாங்கலே” - முன்னாள் ஜனாதிபதி மகிந்த

Published By: Devika

22 Oct, 2017 | 07:09 AM
image

அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தங்காலை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று (21) சிறைக்கே சென்று சந்தித்தார்.

அதன்பின் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் உரிமையைக் கூட தற்போதைய அரசாங்கம் கொடுக்க மறுக்கிறது என்று குறிப்பிட்டார்.

“பிரேமதாசவோ, ஜே.ஆர்.ஜயவர்தனவோ பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைத்ததில்லை. நான் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச் சங்கிலிப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவற்றை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். 

“வாக்குரிமையைப் பறித்துக்கொண்டு, மறுபுறம் இதுபோன்ற அடிப்படை உரிமைகளைக் கூடப் பறித்துக்கொண்டு கல்வீசுவது யார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

“இரண்டு தட்டு வீடு ஒன்றில் இருந்துகொண்டு செய்த வேலைகளெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஆர்ப்பாட்டக்காரர்களைச் சிறையில் அடைப்பதெல்லாம் அரசியல் ரீதியான பழிவாங்கல்களே.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்களைச் சந்திப்பதற்காக, கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவர்களது வீடுகளுக்கு விஜயம் செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38