கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஒப்படைப்பு

Published By: Priyatharshan

21 Oct, 2017 | 09:02 PM
image

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்களால் கடலில்தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியது.

படகு மூழ்கியதால் செய்வதறியாது திகைத்து நின்ற மீனவர்கள் ஏழு பேரும் உயிருக்குப் போராடியபடி இருந்தனர்.

சர்வதேச கடல் எல்லையில், கொழும்புக்குத் தென்கிழக்குப் பகுதியில், 65 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது, மீனவர்கள் சிலர் உயிருக்குப் போராடியபடி இருப்பதைக் கண்ட இலங்கை மீனவர்கள், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று, ஏழு மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் காலி கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். 

இந்நிலையில், குறித்த கப்பலில் இருந்த 7 பேர் தற்போது பாதுகாப்பாக இலங்கையில் உள்ள இந்திய துதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01