எதிர்பாராத தாக்குதல்; எகிப்து பாதுகாப்புப் படையினர் 52 பேர் பலி

Published By: Devika

21 Oct, 2017 | 03:19 PM
image

தீவிரவாதிகளின் இருப்பிடங்களாகக் கருதப்பட்ட சில இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, தீவிரவாதிகள் நடத்திய கடும் தாக்குதலில் பொலிஸ் உட்பட 52 எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

எகிப்திய நீதிபதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவரும் ‘ஹாம்’ தீவிரவாதிகள் எட்டுப் பேர், எகிப்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் முகாமிட்டுத் தங்கியிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குறித்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்துவதற்காக சில வாகனங்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சென்றிருந்தனர்.

அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது ரொக்கெட், கைக்குண்டு மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர்.

எதிர்பாராத இத்தாக்குதலால் பாதுகாப்புப் படையினர் நிலைகுலைந்தனர். சுதாகரித்துக்கொள்ள வாய்ப்பு எதையும் தராத தீவிரவாதிகளின் தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08