தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன் டொலர் - இலங்கை நாணய மதிப்பில் சுமார் 137 கோடி - செலவில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தயாராகிவருகிறது.
மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி காலமானார். எனினும், அவரது உடல் அந்நாட்டு மன்னர்குல வழக்கப்படி ஓராண்டு காலத்தின் பின் எரித்துப் பின் புதைக்கப்படவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி அவரது உடல் எரிக்கப்படவும், மறுநாள் 27ஆம் திகதி அவரது அஸ்தி புதைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகாலமாக, மன்னரின் இறுதிக் கிரியைகளுக்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஐந்து நாள் நிகழ்வாக நடக்கவுள்ள இந்த இறுதிக் கிரியைகளுக்காக, ஆடம்பர அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவரது சாம்பல் புதைக்கப்படவுள்ள இடத்தில் தங்கத்தில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளன.
தாய்லாந்தின் அயல் நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர்கள், அரசியல்வாதிகள் உட்பட சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலஞ்சென்ற மன்னர் ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக தாய்லாந்தின் மன்னராக வீற்றிருந்தவர். தாய்லாந்தின் பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் அவர் தெய்வத்துக்கு நிகரானவராகவே நோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM