இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ள புதிய கடற்படை பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை வந்தடையும். இக் கப்பலுக்கு சுரக் ஷா என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் இரண்டாவது பாதுகாப்பு ஆயுதக் கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை இந்திய அரசாங்கத்திடம் இருந்து கொள்வனவு செய்துள்ள ஈ–ஜி 60 ரகத்தை சேர்ந்த கடல் பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படும். அத்துடன் இன்று இக் கடற்படை பாதுகாப்பு போர்க்கப்பலுக்கு சுரக் ஷா என்ற பெயர் சூட்டப்படவுள்ளது.
இதற்கு முன்னரும் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து வருண என்ற கடல் பாதுகாப்பு ரோந்துக்கப்பலை இலங்கை கடற்படை கொள்வனவு செய்திருந்தது. அதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டிலும் இந்தியாவிடம் இருந்து இலங்கை கடற்படை சயுர என்ற போர்க்கப்பலை கொள்வனவு செய்திருந்தது. இந்நிலையில் குறுகிய காலத்தில் இந்தியாவிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்யும் மூன்றாவது கடல் பாதுகாப்பு கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்றும் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல் மூன்று நாட்கள் இலங்கையில் தரித்திருக்கும். கே. ஆர். ஐ பங் ரோமோ என்ற இந்த கப்பலில் 107 இந்தோனேசியக் கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர். மேலும் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் நாட்களில் இலங்கையுடன் இணைந்து பல்வேறு கூட்டு கடற்படை பயிற்சிகளிலும் பல்வேறு கலை விளையாட்டு செயற்பாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM