ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் காலத்தை கடத்துவதாக குற்றம் சுமத்தி இன்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்கள் காலவரையறையின்றியபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துடனான எந்த பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்காதமையே இதற்கு காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பள உயர்வு கோரிக்கையினை முன்வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகையிரத பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிரதமரின் செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது இம்மாத சம்பளத்தில் உயர்வு உள்ளடக்கப்படுவதாகவும் அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு 19ஆம் திகதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எவையும் வராத காரணத்தினால் இவர்கள் மீண்டும் காலவரையின்றிய பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.
இது தொடர்பில் ரயில்வே நடவடிக்கைகள் மேற்பார்வை சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன குறிப்பிடுகையில்,
கடந்த மாதம் 20 ஆம் திகதி எமது தொழிற்சங்கங்கள் அனைத்தும் பிரதமரின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம். இதன் போது திறைசேரி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். எமக்கான சம்பள உயர்வை இரண்டு கட்டங்களில் உள்ளடக்குவதாகவும் இன்றைய தினத்தில் அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை சகல தொழிற்சங்கங்களுக்கும் வழங்குவதாகவும் பிரதமரின் செயலாளர் எமக்கு வாக்குறுதி வழங்கினார்.
இந்த சம்பள உயர்வின் பிரகாரம் 300 ரூபாய் அளவிலான அதிகரிப்பே ஏற்படும், எம்.பி1, எம்.பி2 தர ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்குமாறு, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்திருந்தார். எனவே ஒருமாத காலத்தில் அதனை நிறைவுசெய்து தருவதாக இவர்கள் வாக்குறிதி வழங்கினர். ஆனால் உரிய அதிகாரிகள் இதுவரையில் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆகவே பிரதமரின் செயலாளரின் வாக்குறுதி மீறப்பட்டுள்ள நிலையில் புகையிரத தொழிற்சங்கங்கள், புகையிரத நிலைய அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் எமது சகல தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.
அதாவது நாளை( இன்று ) 20 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் நாடளாவிய ரீதியில் காலவரையறையின்றி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளோம். நாம் நியாயமாக எமது கோரிக்கைகளை முன்வைத்து அமைதியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும் எமது பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். எனவே மக்களை அசௌகரியப்படுத்தும் செயற்பாடாக அமைந்தாலும் கூட எமது போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் மூலமாக காலத்தை கடத்தாது எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வரையில் நாம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM