புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பாண்டியன் வீதி பகுதியில் நேற்று இரவு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு குறித்த பாண்டியன் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் மீது இனம்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்கள் உடனடியாகவே அந்த பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
காயமடைந்தவரின் தலைப்பகுதியில் காட்டுகத்தியால் மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM