மட்டக்களப்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையா ற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமிழர்கள் அதிக பணத்தை மதுவுக்காக வும்,முஸ்லிம்கள் அதிகபணத்தை கல்விக்காகவும் செலவழிக்கின்றார்கள் என சனிக்கிழமை தேசிய பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி அமைச்சர் தமிழ் மக்களிடம் இக் கூற்றுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) நிர்வாகச்செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்தார்.
முஸ்லிம் கிராமங்களை அண்டிய தமிழ் பகுதிகளில் இருக்கும் மதுபான சாலைகளில் இரவு 06 மணிமுதல் 08 மணிவரை யார் அதிகம் சாராயம் வாங்குகின்றார்கள் என்பதை பிரதி அமைச்சர் அமீர் அலி நின்று பார்த்திருந்தால் இக் கூற்றை அவர் மாறி கூறியிருக்க வேண்டும். குறிப்பாக காரைதீவு, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி, செங்கலடி போன்ற பகுதிகளில் இருக்கும் மதுபான சாலைகளில் விற்பனை அமோகமாக நடை பெறுவது யா
ரால் என்பது அமைச்சருக்கு தெரியாது என
நினைக்கிறேன்.
தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே சொத்து கல்வி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனது பிள்ளைகளுக்கு கல்வியை ஊட்டுவதில் தமிழர்கள் பின் நிற்பதில்லை. அதற்காக அவர்கள் எவ்வளவு பணத்தை விட்டெறிந்து செலவழிக்க தயாராக உள்ளனர். தமிழர்கள் பிள்ளைகளை இடை
நடுவில் வியாபாரம் செய்ய அனுப்புவதில்லை.
எதற்கெடுத்தாலும் அண்மைக்காலமாக தமிழ் மக்கள் கிள்ளுக் கீரைகள் என நினைத்து சில கிழக்கு அரசியல் வாதிகள் எதை எதையோ எல்லாம் கூறும் அளவுக்கு அவர்களின் இனத்துவேஷம் அதிகரித்
துள்ளது.
அண்மையில் கூட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் கல்குடாவில் நடை பெற்ற நிகழ் வொன்றிலே கிழக்கு மாகாண அதிகாரம் தமிழர் கைகளில் சென்று விட்டால் முஸ்லிம் மக்கள் தமிழர்களுக்கு அடிமையாக இரு
க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரெலோ தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து இருந்தது.
இன்று பிரதி அமைச்சர் அமீர் அலியின் பிரதேசத்தில் உள்ள கல்குடாவில் மதுபான உற்பத்தி நிலையமே அமைக்கப்பட்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் உள்ளார்கள்.
எனவே அமைச்சர் தெரிவித்த இக் கூற்றுக்கு கிழக்கு மாகாண தமிழர்களிடம் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ரெலோவின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM