நான்கு அரிசி வகைகளின் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக ச.தொ.ச. நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார்.
அதற்கமைவாக வெள்ளை அரிசி 65 ரூபாவாகவும் நாட்டு அரிசி 73 ரூபாவாகவும் உடைந்த அரிசி 60 ரூபாவாகவும் சம்பா 80 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ச.தொ.ச. தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி விலையேற்றம் காரணமாக மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை நாடெங்கும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க ச.தொ.ச. நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாடு பூராகவுமுள்ள 370 ச.தொ.ச. நிறுவனத்தின் கிளைகள் ஊடாக சாதாரண விலையில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில ச.தொ.ச. நிறுவனம் வழங்கி வருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட வரட்சியினால் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே விலை உயர்வடைந்துள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடன் 50 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்து தற்போது ஒரு இலட்சம் கிலோ அரிசி முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM