நாட்டில் 15 அரசதுறை நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள், இழப்புகள், மோசடிகள் மற்றும் தவறான கையாடல்கள் என்பவற்றுக்கான சான்றுகளை உள்ளடக்கிய நான் காவது கோப் குழு அறிக்கை சபையில் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்றக்குழுவின் (கோப்) அறிக்கை அக்குழு வின் தலைவரான மக்கள் விடுதலை முன்ன ணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தியினால் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையை சமர்பித்து பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி உரையாற்றுகையில்,
15அரசதுறைநிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்கள், இழப்புகள், மோசடிகள் மற்றும் தவறான கையாடல்கள் இடம்பெற்றுள்ளமைக்கான சான்றுகள் உள்ளன. இவை பல பில்லியன்கள் வரைய செல்லும் நிலைமையே உள்ளது.
2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கோப் குழுவின் முன்னிலைக்கு அழைக்கப்பட்ட 15 நிறுவனங்களில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளை அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விசாரணைகளுக்கும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு கேள்விகளுடாக உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்களை கொண்டிருக்கின்றது.
இந்த அறிக்கைகளில் வௌிப்படுத்தப்படும் விடயங்களை சீர் செய்வதற்கு பிரதம கணக்கியல் அதிகாரிகள் என்ற வகையில் அமைச்சின் செயலாளர்கள் தீவிரமாக கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படவில்லை என்றால் இந்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது என்றார்.
இந்நிலையில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
2015 ஆம் ஆண்டில் தேசியபோக்குவரத்துஆணைக்குழு மூன்று தரம் பயண இலக்குபலகைகள் மற்றும் அவசரதொலைபேசி இலக்கவிபர ஸ்டிக்கர்களைஅச்சிடுவதற்கு 1705343 ரூபாவை செலவிட்டிருக்கின்றது. முறையானகொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படாமலேயே இந்தபணம் செலவிடப்பட்டிருக்கின்றது.
ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாகாண பஸ்களை ஒழுங்குபடுத்துவதற்கு கட்டடமொன்றின் அங்கமொன்றை புதுபிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 37 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இருப்பினும் அத்தொகை பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 79 மில்லியன் ரூபாவை செலவிட்டு 1,307 ஜி.பி.எஸ். கருவிகள் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள போதிலும், பஸ்களிலுள்ள கருவிகள் செயற்படுவதில்லை. போகுவரத்து ஆணைக்குகு ஏற்பாடு செய்த விழாவொன்றுக்காக தேசிய 8009310 ரூபாவையும் தொலைக்காட்சி ஆவணப்படமொன்றிற்காக 1891000 ரூபாவையும் உரிய அனுமதியின்றி செலவிட்டுள்ளது. கொழும்பு பஸ்டியன் மாவத்தை, அநுராதபுரம், குருநாகல், நுவரெலியா, கதிர்காமம், ரன்ன மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் மாகாணங்களுக்கு இடையிலான மற்றும் மாகாண ரீதியான பஸ் சேவைகள் கால அட்டவணைகளை காட்சிப்படுத்துவதற்கு 7 இலத்திரனியல் திரைகளை 2013 ஆம் ஆண்டில் தேசியபோக்குவரத்து ஆணைக்குழு 62 மில்லியன் ரூபாசெலவில் நிறுவியிருந்த போதிலும், தற்போது அந்த திரைகள் செயற்பாட்டில் இல்லை.
அங்கீகரிக்கப்பட்ட 8 மில்லியன் ரூபா என்ற தொகையைவிடவும் அதிகமாக சென்று 9.2 மில்லியன் ரூபா செலவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஒருவருக்கு வாகனமொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இரு சந்தர்ப்பங்களில் பாடசாலை பைகளை விநியோகிப்பதற்காக 2669500ரூபா மற்றும் 1327500 ரூபா ஆகிய தொகைகளை உரிய அனுமதியின்றி செலவிட்டுள்ளது
இலங்கை வங்கியினால் தனியார் ஹோட்டலொன்றுக்கு வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபா கடனுக்கான வட்டியின் பகுதியொன்றாக 7382305ரூபாவை 2014 ஆம் ஆண்டில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை செலுத்தியுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான விடுமுறை விடுதியொன்றின் 30 அறைகளை புதுப்பிப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்த 29195802ரூபாவில் 11089228 ரூபா என்ற தொகையானது எந்தவொரு பணியும் நிறைவேற்றப்படாமல் பெறப்பட்டுள்ளது. எவ்விதமான அனுமதியுமின்றி கற்கள் விநியோகஸ்த்தர் ஒருவருக்கு 10196000 ரூபா செலுத்தப்பட்டுள்ளதோடு ஒழுங்குவிதிகள் மதிக்கப்படாமல் அதிகாரசபையினால் விநியோகஸ்த்தர்களுக்கு 3226950 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
நிர்மாணப் பணிகளை ஐந்து வருடங்களில் புர்த்தி செய்யும் உத்தேசத்துடன் 4 ஆயிரம் அறைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடியவிடுமுறை உல்லாச விடுதிகளை நிர்மாணிப்பதற்கு 5,521 மில்லியன் ரூபா என்ற உத்தேச மதிப்பீட்டு செலவுத் தொகையில் கல்பிட்டி ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா திட்டம் 2008ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் கூட,2014 ஆம் ஆண்டுடிசம்பர்மாதம் 31 ஆம் திகதிவரை 88,797,590 ரூபா செலவிடப்பட்டுள்ள போதிலும் ஒரு அறை கூட நிர்மாணிக்கப்பட்டிருக்கவில்லை.
மத்தள சர்வதேச விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் 2,105,298,382 ரூபா, 2014 ஆம் ஆண்டில் 2,729,201,680 ரூபா, 2015ஆம் ஆண்டில் 3,099,230,580 ரூபா மற்றும் 2016ஆம் ஆண்டில் 1,546,931,328 ரூபா நிகர நட்டத்தில் இயங்கியுள்ளது.
மக்கள் வங்கியினால் வாடிக்கையாளர் ஒருவருக்கு கடனாக வழங்கப்பட்ட 260 மில்லியன் ரூபாதொகையானது 2011 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்ததொகையானது சம்பந்தப்பட்ட அந்த ஆண்டில் மக்கள் வங்கியினால் அறவிட முடியா கடன்களாகத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் 51 சதவீததொகையாக அமைந்துள்ளது.
இலங்கை பெற்றோலிய ் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் ஹெட்ஜிங் ஒப்பந்தம் குறித்து நடத்தப்படட விசாரணைகளின் பிரகாரம், அவ்வொப்பந்தத்தினால் ஏற்பட்ட நட்டம் 2016ஆம் ஆண்டு ஜனவரியில் 10.2பில்லியன் ரூபாவாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அத்தொகை 14.06 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM