அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்கை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் சட்ட மா அதிபரூடாக நீதிமன்றில் விடயங்களை முன்வைக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. இதன்போது மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதனை மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்காரணமாக தற்போது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதியிடம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதன்போது அனுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து வவுனியா நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுவதானது நீதிமன்ற நடவடிக்கை என்பதால் அது தொடர்பில் சட்டமா அதிபர் திணக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக நீதிமன்றத்திற்கு இந்த விடயங்கள் குறித்து விளக்கமளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமன்றி இதன்போது ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் அமைச்சர் சாகல ரட்ணநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM