குளியலறையில் பெண் அதிபர் கழுத்தையறுத்துத் தற்கொலை!

Published By: Devika

19 Oct, 2017 | 12:31 PM
image

பாடசாலை ஒன்றின் பெண் பிரதி அதிபர் தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பியகம பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தொம்பை கிம்புல்வத்தை மகா வித்தியாலயத்திலேயே மேற்படி பெண் பிரதி அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார். ஐம்பத்து நான்கு வயதுடைய இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

அதிகாலை இரண்டு மணியளவில் குளியலறையில் ஏதோ சத்தம் கேட்டதையடுத்து கண்விழித்த அவரது கணவர், குளியலறைக்குச் சென்று பார்த்தார். அங்கே குறித்த பெண் தன் கையில் மன்னை கத்தியை வைத்தபடி, கழுத்தறுபட்ட நிலையில் இருந்ததைக் கண்டார்.

உடனே தன் மகனை அழைத்து அவரின் உதவியுடன் தன் மனைவியை பியகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். எனினும், அதீத இரத்த இழப்பால் பெண் பிரதி அதிபர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து நீதவான் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43