டி.எஸ்.ஐ. சுப்பர்ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் - 2017 இறுதிப் போட்டிகள் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இம்மாதம் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
டி.எஸ்.ஐ. சுப்பர்ஸ்போட் பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் முதலாவது போட்டியை கடந்த 1999 ஆம் ஆண்டில் 198 அணிகளின் பங்களிப்புடன் நடத்தியிருந்தது. அன்று முதல் டி.எஸ்.ஐ. நிறுவனம், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, இந்தப் போட்டித் தொடரை வருடாந்தம் ஏற்பாடு செய்து, அனுசரணை வழங்கி வருகிறது.
நகர்ப்புற மற்றும் கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு, தேசிய அரங்கு ஒன்றைப் பெற்றுக்கொடுத்து, அவர்களது திறமைகளை வளர்க்கவும் கரப்பந்தாட்டம் தொடர்பான சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொடுப்பதுமே இந்தப் போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வருட போட்டித் தொடரில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிரிவும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி - 15 மற்றும் 17 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்கள் 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆண்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளது. 24 ஆம் திகதி 13 மற்றும் 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்கள், 13, 17 மற்றும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் ஆகிய பிரிவுகளின் போட்டிகள் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM